தேர்வு எழுதும் மாணவ மாணவிகள்
விருத்தாசலம் சாலை, ஆண்டிமடம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. அ.கு.எண்-621801. தொலைபேசி:04331-293693.
Friday, 6 May 2011
பி.எட் - மாதிரித்தேர்வு தொடங்கியது
2010-2011ம் கல்வி ஆண்டில் பி.எட் பயிலும் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு இன்று (06-05-2011) மாதிரித்தேர்வு தொடங்கியது.
Tuesday, 3 May 2011
பி.எட் - மாதிரித் தேர்வு 2010-2011
2010-2011ம் கல்வி ஆண்டில் பி.எட் பயிலும் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு 06-05-2011 முதல் நடைபெற உள்ளது.
S.NO | DATE | SUBJECT | TIME |
1 | Education in the Emerging Indian Society | ||
2 | Psychology of Learning and Human Development | ||
3 | Educational Innovations and Management | ||
4 | Electives | ||
5 | Optional - I | ||
6 | Optional - II |
Monday, 25 April 2011
பி.எட் பல்கலைக்கழகத்தேர்வு கால அட்டவணை (2010-2011)
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தும் பி.எட் தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
பி.எட் பல்கலைக்கழகத்தேர்வு கால அட்டவணை (2010-2011)
பி.எட் பல்கலைக்கழகத்தேர்வு கால அட்டவணை (2010-2011)
பி.எட் - முதல் திருப்புதல் தேர்வு 2010-2011
2010-2011ம் கல்வி ஆண்டில் பி.எட் பயிலும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு 27-04-2011 முதல் நடைபெற உள்ளது.
s.no | date | subject | time |
1 | Education in the Emerging Indian Society | ||
2 | Psychology of Learning and Human Development | ||
3 | Educational Innovations and Management | ||
4 | Electives | ||
5 | Optional - I | ||
6 | Optional - II |
Friday, 22 April 2011
குடிமைப்பயிற்சி முகாம் ஐந்தாம் நாள்
குடிமைப்பயிற்சி முகாமின் ஐந்தாம் நாளான உடற்கல்வி நாள் இன்று (19-04-2011) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்நாடு வலைப்பந்துக்கழத்தின் நடுவர் மற்றும் தலைவர் திரு.T.பாண்டியன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார். ஸ்ரீ சௌபாக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர் திரு.A.சின்னப்பராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.தாளாளர்.திரு.Rm.B.சண்முகநாதன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.ஸ்ரீ சௌபாக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் திரு.S.கந்தவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு வலைப்பந்துக்கழத்தின் நடுவர் மற்றும் தலைவர் திரு.T.பாண்டியன் அவர்கள் உடல் நலக்கல்வி மற்றும் யோகா பயிற்சி பற்றி செய்முறையுடன் சிறப்புரையாற்றினார்.
பின் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.பின் விவேகானந்தா மகளிர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் செல்வி.N.கோப்பெருந்தேவி அவர்கள் மகளிருக்கான சிறப்பு உடற்பயிற்சியும், யோகாவும் பற்றிய சிறப்புரையாற்றினார்.
விரிவுரையாளர் திரு.V.சுவாமிநாதன் அவர்கள் ஐந்து நாட்கள் நடைபெற்ற குடிமைப்பயிற்சி முகாம் பற்றிய தொகுப்புரை வழங்கினார்.
கல்லூரி விரிவுரையாளர் திரு.M.இராஜ்மோகன் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் நிறைவடைந்தது.
குடிமைப்பயிற்சி முகாம் நான்காம் நாள்
குடிமைப்பயிற்சி முகாமின் நான்காம் நாளான விழிப்புணர்வு நாள் இன்று (18-04-2011) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. நிர்வாக அலுவலர் திரு.K.V.தங்கராசு அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்.விரிவுரையாளர் திரு.V.சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.நிர்வாக அலுவலர் திரு.K.V.தங்கராசு அவர்கள் தலைமையுரையாற்றினார்.திரு.T.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்துவதற்கான வழிமுறைப்பற்றிய சிறப்புரையாற்றினார்.பின் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ சௌபாக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் திரு.S.கந்தவேல் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் நிறைவடைந்தது.
Sunday, 17 April 2011
குடிமைப்பயிற்சி முகாம் மூன்றாம் நாள்
குடிமைப்பயிற்சி முகாமின் மூன்றாம் நாளான கணினி நாள் இன்று (17-04-2011) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கல்லூரி விரிவுரையாளர் திரு.V.சுவாமிநாதன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்.
விரிவுரையாளர் திரு.M.இராஜ்மோகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தாளாளர்.திரு.Rm.B.சண்முகநாதன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
பின் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி பட்டிமன்றம் நடைபெற்றது.
கல்லூரி விரிவுரையாளர் செல்வி. K.கலையரசி அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் நிறைவடைந்தது.
விரிவுரையாளர் திரு.M.இராஜ்மோகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தாளாளர்.திரு.Rm.B.சண்முகநாதன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
"செம்மொழி இளம் அறிஞர்" முனைவர். திரு. மு.இளங்கோவன் துணைப்பேராசிரியர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி அவர்கள் "தமிழும் இணையமும் " பற்றி பட விளக்கத்துடன் விரிவாக
சிறப்புரையாற்றினார்.
விரிவுரையாளர் சு.கந்தவேல், நிர்வாக அலுவலர் தங்கராசு, தாளாளர் இர.சண்முகநாதன், முனைவர்.மு.இளங்கோவன், முதல்வர் கு.முத்துக்குமரன், விரிவுரையாளர்கள் ம.இராஜ்மோகன், கா.கலையரசி.
Saturday, 16 April 2011
குடிமைப்பயிற்சி முகாம் இரண்டாம் நாள்
குடிமைப்பயிற்சி முகாமின் இரண்டாம் நாளான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாள் இன்று (16-04-2011) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கல்லூரி முதல்வர் திரு.K.முத்துக்குமரன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்.
விரிவுரையாளர் செல்வி.K.கலையரசி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
முதல்வர் திரு.K.முத்துக்குமரன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
திரு.M.அறிவழகன் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், முதன்மைக்கல்வி அலுவலகம், அரியலூர் அவர்கள் "சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறப்புரை" ஆற்றினார்.
மதிய உணவு இடைவேளைக்குப்பின் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தாளாளர்.திரு.Rm.B.சண்முகநாதன் அவர்கள் மரக்கன்று நடுகிறார்.
அரியலூர் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்கள் மரக்கன்று நடுகிறார்.
கல்லூரி விரிவுரையாளர் திரு.M.இராஜ்மோகன் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் நிறைவடைந்தது.
Friday, 15 April 2011
குடிமைப்பயிற்சி முகாம் தொடங்கியது
சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் குடிமைப்பயிற்சி முகாம் இன்று 15-04-2011 காலை தமிழ்த்தாய்வாழ்த்துடன் தொடங்கியது. தாளாளர் திரு.Rm.B.சண்முகநாதன் M.Sc.,M.Phil., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றினார். முதல்வர் திரு.K.முத்துக்குமரன் M.A.,M.A.,M.Ed., அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தாளாளர் திரு.Rm.B.சண்முகநாதன் M.Sc.,M.Phil., அவர்கள் தலைமை உரையாற்றினார்.
திரு.இரா.தமிழ்மணி M.A.,M.Ed., உதவி தொடக்கக்கல்வி அலுவலர்(ஓய்வு) திருச்சி அவர்கள் "பள்ளியில் வழிகாட்டுதலும், அறிவுரை பகர்தலின் முக்கியத்துவமும்" பற்றிய சிறப்புரையாற்றினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கல்லூரி மாணக்கர்களின் கலை நிழ்ச்சி நடைபெற்றது.
தேநீர் இடைவேளைக்குப்பிறகு கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இறுதியில் திரு.V.சுவாமிநாதன் M.A.,M.Ed., விரிவுரையாளர் அவர்கள் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் இனிதே நிறைவுற்றது.
தாளாளர் திரு.Rm.B.சண்முகநாதன் M.Sc.,M.Phil., அவர்கள் தலைமை உரையாற்றினார்.
திரு.இரா.தமிழ்மணி M.A.,M.Ed., உதவி தொடக்கக்கல்வி அலுவலர்(ஓய்வு) திருச்சி அவர்கள் "பள்ளியில் வழிகாட்டுதலும், அறிவுரை பகர்தலின் முக்கியத்துவமும்" பற்றிய சிறப்புரையாற்றினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கல்லூரி மாணக்கர்களின் கலை நிழ்ச்சி நடைபெற்றது.
தேநீர் இடைவேளைக்குப்பிறகு கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இறுதியில் திரு.V.சுவாமிநாதன் M.A.,M.Ed., விரிவுரையாளர் அவர்கள் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் இனிதே நிறைவுற்றது.
Thursday, 14 April 2011
குடிமைப்பயிற்சி முகாம்
ஸ்ரீ சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் குடிமைப்பயிற்சி முகாம் 15-04-2011 முதல் 19-04-2011 வரை நடைபெற இருக்கிறது.
Saturday, 2 April 2011
ஸ்ரீ சௌபாக்யா கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா
ஸ்ரீ சௌபாக்யா கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா 04-04-2011
Saturday, 5 February 2011
2009-2010ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பி.எட் தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் முதலிடம்
2009-2010ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பி.எட் தேர்வில் அரியலூர் மாவட்ட அளவில் சௌபாக்யா கல்லூரி மாணவி செல்வி.புஷ்பலதா முதல் மதிப்பெண்ணும், செல்வி. சசிரேகா ஒன்பதாவது மதிப்பெண்ணும் பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
கல்லூரி தாளாளர் திரு. Rm.B.சண்முகநாதன் முதலிடம் பெற்ற மாணவி புஷ்பலதாவிற்கு கேடயத்தை வழங்கினார்.
நிர்வாக அலுவலர் திரு.தங்கராசு, விரிவுரையாளர் செல்வி K.கலையரசி, முதலிடம் பெற்ற மாணவி செல்வி.புஷ்பலதா,கல்லூரி தாளாளர் திரு. RmB.சண்முகநாதன், விரிவுரையாளர்கள் திரு.கந்தவேல், திரு. ம.இராஜ்மோகன்.
Subscribe to:
Posts (Atom)





